சுதந்திரம் - இறைவன்
இவற்றில்
இரண்டில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும்படி
என்னிடம் சொன்னால்
நான் முதலில்
சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்!
ஏனெனில்
சுதந்திர உணர்வற்ற
குறுகிய மனம்
எவ்வாறு
எல்லைகளற்று விரிந்த
இறைவனை அறியும்?
சுதந்திரம் என்பது
நடு-நிலைப் பார்வை!
அனைத்து வித
சித்தாந்த
கூடாரங்களில் இருந்தும்
வெளியேறி
வெட்டவெளியில்
தனியனாய் நின்று
உண்மையை தரிசிக்கும் பேறு!
பொய்மைக் கோட்டைகளைப்
பொடிப்பொடியாக்கும்
பேராண்மை!
-மோகன் பால்கி
Monday, February 1, 2010
எது பேராண்மை?
Posted by
Mohan Balki - YoZenMind Counseling Psychologist, VIP Mentor, T. Nagar, Chennai, India.
at
2/01/2010 09:40:00 AM


Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment