Friday, September 2, 2016

தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!

சிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம்
சின்னேரம் மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும்!
சிவகாசி அம்மட்டோ! அச்சகத்தில் அரும்புரட்சி
சிருங்கார பட்டாசு உலகமெலாம் ஏற்றுமதி
ஆயிரம் கோடிகளில் புரளுகின்ற செலவாணி
அத்தனையும் உள்ளத்தில் சட்டென்று நினைவுவரும்!
நேற்றொரு நாள் மதியத்தில் மனமொடிந்தேன்
முதலிப் பட்டென்னும் ஊரொன்றில் வெடிவிபத்தாம்!

ஆறெட்டு அறைமுழுதும் நாலாறு ஆள்வீதம்
முன்னூரோ நானூறோ தொழிலாளர் பணிபுரிய
ஓரறையில் தவறுதலாய் தீப்பற்றி வியாபித்து
ஒவ்வொன்றாய் வெடிவெடித்து சிதறிப் புகைசூழ
பட்டாசுத் தொழிற்சாலை மண்மூடிப் போனதம்மா!
பெரும்சப்தம் தொடர்ந்துவர ஊர்மக்கள் சிலநூறும்
அருமைச் சொந்தங்கள் உறவுகளை காப்பாற்ற
முன்னேறிச் செல்கையிலே பெருஞ்சோகம் இன்னொன்றாம்!


பட்டாசுக் கிட்டங்கி வெடித்துச் சிதறியதால்
உள்ளிருந்த தொழிலாளர் காப்பாற்ற போனவரும்
செல்லரித்த புத்தகமாய் சிதறிச் செத்தொழிந்தார்!
அம்மவோ! ஆற்றாமை உள்ளமெலாம் எரியுதம்மா
விம்மி அழுவதற்கோ இருபத்து கோடிவிழி?
படித்தவர் படிப்பெதற்கோ காப்பதவர் கடனிலையோ?
அரசும் அறிஞர்களும் இம்மட்டும் செய்ததென?
வறியவரை காப்பதற்கு வகுத்தாண்ட முறைகளென?


வருமுன்னர் காவாதான் கதைகள் அறியேமோ ?
எண்ணிக்கை சொல்வதெலாம் உண்மை எனலாமோ?
உளர்-இலர் மெய்க்கதைகள் கணக்கும் சரிதானோ ?
உழைத்துப் பிழைக்கின்ற தமிழ்மக்கள் கதிஇதுவோ
உலகமெலாம் நீர்-நெருப்பால் அழிவதே நம்விதியோ?
தமிழ்உயிர்க்கு மதிப்பிலையோ வெறும் மயிரோ?
அமிழ்கடல்சூழ் நிலமெங்கும் இப்பேதை போல்யாரோ?
வெறும்தூசு கண்பட்டால் சினந்தெழுஊம் இனமுண்டே!


பெருஞ்சாவு இனமொத்தம் எரித்தொழிப்பு நிகழ்ந்தாலும்
வெறும்பேச்சு கடுதாசி கால்நக்க வடக்கேகும்
தெருவோரத் திருத்தலைமை உணர்வற்ற தலைமுறைகள்
ஆண்டவன் பேர்சொல்லி தப்பிக்கும் ஆளுமைகள்!
ஆளுமையை குறைசொல்லும் முன்னாள் ஆண்டவர்கள்
வேலைமட்டும் நடக்காமல் வீணாய்நாம் போனவராம்!
ஈழம் என்றாலும் இடிந்தகரை என்றாலும்
தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!


உலகெங்கும் உதைவாங்கி உளம்நோகவோ-தமிழன்!
தலையொன்று சரிஇருந்தால் யாவும் கிடைத்திருக்கும்!
விலைபோன கதையால்தான் வில்லங்கம் வந்ததம்மா!
பின்னொருநாள் நம்நிலத்தில் நன்மை பெருகுமெனும்
விண்மீன்கள் தென்படலை உண்மை ஒழிந்ததம்மா!
ஊரடித்து உலையிலிடும் உன்மத்தம் வளருதிங்கு!
சாதியினால் சமயத்தால் பிட்டுவைத்தக் கட்சிகளால்
திரையுலக மாயை யினால் தீமை நிலைத்ததம்மா!


இலஞ்சப் பேய்களினால் இரக்கமற்ற இராட்சதரால்
பொய்யையே விதைக்கின்ற அரசப் புன்மையரால்
ஆள்பவர்க்கு அடிவருடும் உயர்ந்த பதவியரால்
ஏழை படும்பாடு எள்ளளவும் உணராமல்
உள்ளவர்கள் படித்தவர்கள் நாட்டை நடத்துகிறார்!
வெட்கப்பட வேண்டும் வெறும்சின்ன தேசங்கள்
ஒற்றுமையால் தியாகத்தால் ஓங்கி வளர்ந்ததம்மா
இவர்மட்டும் தேய்கின்றார் நாடிலி ஆனாரே!


இனிஊழிஒன்று வேண்டுகிறேன் வேண்டுகிறேன்யானே!
தமிழ்ச்சங்கம் அழிந்ததுபோல் ஊரழிக அழிக !
இங்கு ஆழிசூழ் நிலமெல்லாம் தீப்பற்றி எரிக!
நிலம்பிளந்து மனிதமெலாம் மண்ணுக்குள் மறைக!
பொய்மை பொசுங்கிட புதுக்குலம் தோன்றுக!
முதுகுடி ஒன்றது முடிவதும் நன்றாம்!
தனியொரு தமிழர்க்கு வாழ்விலைஎன்றால்
தரணியம் எதற்கோ மொத்தமும் மறைக!


-யோஜென் பால்கி
www.yozenmind.com

Sunday, December 4, 2011

Plastic- (Palithin) water-pockets!

This poem was my agony on seeing scattered plastic Palithin water-pockets!!

It was formed in my mind when i was waiting in the Broadway (old) Chennai bus terminal and watching the Palithin  water pockets scattered everywhere over there.

That was probably the entry time of water pockets in metro cities. As I was well aware of the danger and insoluble nature in our mother-soil I felt more sad about it's consequence too. I started scribbling in a piece of paper there itself and it was published in Cholai Thamizhinian's monthly magazine in Dec 1998.





உறை நீர் காற்று 

பார்த்தீனியச் செடியினும் 
விரிந்த அபாயமாய் 
'பாலித்தீன்' புண்கள் 
பூமி மேனியில்!

காசு விட்டெறிந்து 
கையளவு நீர்பருகி 
வீசிய உறையோடு 
'காருண்யம்' குப்பையில்!

நெஞ்சு நனைத்து 
தாகம் போக்கவும் 
சமூகம் கேட்கும் 
வஞ்சமாய்க் காசு!

ஒன்று நிச்சயம் 
நாளை 
மூச்சுக் காற்றுக்கும் 
பஞ்சம் வரும்!

இனி 
மனிதாபிமானத்தை 
புதைத்த கல்லறை மீது 
கல்லாப்பெட்டிகள் 
வேகமாய் முளைக்கும் 
காற்று  முகமூடிகளுடன்....!!

-'இந்தக் கணத்தில்' பாலு 
(Yozenbalki )

குறிப்பு: அப்போது 1998-இல் என்போன்றவர்கள் சிலர் மனம் வெதும்பி எழுதிய ஒரு விஷயத்துக்கு தற்போது 14 வருடம் கழித்து விடிவு கிடைத்துள்ளது. முதலில் டெல்லி, பிறகு பிற இந்திய நகரங்கள் என்று வந்து, தற்போது சென்னையிலும் பாலிதீன்-பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டு வருகின்றன.
http://goo.gl/Sjmo4  இது நம் அன்னை நிலத்துக்கு சற்று ஆறுதல் தரும் அல்லவா?
________________________________
Parthinia chediyinum             
Virindha abaayamaay
Palitheen pun gal
Boomi meniyil.

Kaasu vittenrindhu
Kaiyalavu neer parugi
Veesiya uraiyodu
Kaarunyam kuppaiyil…

Nenju nanaiththu
Thagam pokkavum
Samoogam ketkum
Vanjamaay kaasu….

Onru nichayam
Naalai
moochuk kaatrukkum
Panjam varum

Ini,
Manidhabimaanathai
 Pudhaiththa Kallarai meedhu
Kallaappettigal
vegamaay mulaikkum

Kaatru mugamoodigaludan….!!
________________________
-yozenbalki
www.yozenmind.com
Published in the year 1998.
________________________

Monday, November 28, 2011

நான்தான் வேறு ஏதாகவோ மாறிப் போனேன்! I changed...while changing others!!

My Old Tamil Poem:
 
Describes
How we change while changing
others...!

In the process of converting others/things,
the converter gets converted to other ways
and forms!

For e.g. when you want to teach
one the Love and tolerance, in the process
of implementing, you yourself will become
unlovable and intolerable one!!

The theme is: One can not become, unless
he is already that!!

So, Teaching is an outward process;superficial.
wheras, Being is an inward dynamism; encompasses everything!

- Mohan Balki


Sunday, December 5, 2010

பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது!


பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இது!

வரிஎன்றும் வார்த்தைஎன்றும்

அறிவென்றும் பெரிதென்றும்

இறுமாறும் வெளிஞானம்

உயர்வென்று தடுமாறுது!

விஞ்ஞானம் பெயர் வைக்கும்

நீருக்குள் நெருப்பிருக்க

வழியில்லை என்றெண்ணும்!

பின்னோர் நாள் 'ஆம்' ஆனால்

நெருப்பின்னை 'தொருப்பென்னும்!

வேறென்ன?

அலங்காரப் பொருள் செய்யும்

அதுபோதும் என்றெண்ணும்!

வேறென்ன?

அண்டத்தில் பிண்டமுள

பிண்டத்தில் அண்டமுள

என்றவனை பரிகசித்து

நீர் நெருப்பில் பெருவெடிப்பில்

பனியுருகும் பரிதவிப்பில்

விஞ்ஞானச் சிற்றெறும்பு

பொந்துக்குள் புலம்பி அழும்!

அருவொன்று உருவாகும்

உருவொன்று திடமாகும்

திடம் நீராய் காற்றாகி

மறைந்தங்கு மீண்டுவரும்!

பெயர் மாறும் அதற்கென்றும்

பெயரில்லை !

இயற்கை ஓர் பெரும் வியப்பு!

ஆதியந்தம் அற்ற வழி!

பிரபஞ்ச சமுத்திரத்தில்

சின்னதொரு சிப்பிகள் நாம்!

Monday, May 3, 2010

உங்களுக்கொரு கொரியர் !

(சிறு வயதில் சிறுகதைகள் எழுதியதுண்டு. இது திடீர் என்று சில மாதங்களுக்கு முன் வந்த கதை. சும்மா நீங்களும் படியுங்கள்!)

தீய்த்துக் கரிக்கும் கத்திரி வெயில்!
கோடை அரவு தீண்டிய வெம்மையிலும்  வண்டி சரித்து வாகாய் வளைந்து
அங்கு கூடி இருந்த பாண் பராக் புகையிலை துப்பி சீரழிந்திருந்த
நாயர் டீக்கடை வாசல் பக்கம் நிறுத்துகிறேன்
தேநீர் பருகுவது ஒரு வித escapism
என்று சொல்லிக் கொள்ளலாம்தான்...
திவாரி நித்தியாநந்தன் முதல் டெல்லி ஐ நா வரை அலசும் சிகரெட்டுப் புகை..
பட்டும் படாமலும் நானும் அமர்ந்து மூன்று நான்கு மடக்கு தேநீர் முழுங்கிக் கொண்டே செல் போன்-ஐ எடுக்கிறேன் இன்னும் சில பல நம்பர்களுக்குப் பேசுகிறேன். எல்லாம் தோல்வி தான், இருப்பினும் அவை வெற்றியின் முதல் படி என்று எனக்குப் பாடம் சொன்னவன் சொன்னது செவியில் ஒலிக்கிறது.
இதற்கு மேல் அடி வாங்க மனதில் தெம்பு இல்லை. நாளை பார்க்கலாம். இதோ இந்த ஒரு நாள் முடிந்து விட்டது. ..சேல்ஸ் இன்னும் இரண்டு நாளில் முடிக்க வேண்டும்.
அடிபட்ட பறவையைப் போல் வீடு திரும்புகிறேன்
என் குழந்தைக்கு தின்பண்டம் ஏதேனும் வாங்கி இருக்கலாம்தான்!
மனைவிக்குப் பிடித்த மல்லிகை, அந்த பஞ்சு மிட்டாய்..இன்னும் ஏதோ ஒன்று அவளுக்குப் பிடிக்குமே!
இம்..எல்லாம் சரியாக வரட்டும்..அப்போது பார்..இன்று எனக்கு மனம் சரியில்லை..!
எப்போது தான் இருந்ததாம்...மனைவி கேட்கும் குரல் காதில்...
!
சத்தமின்றி படியேறி அழைப்பு மணி அழுத்தி, காத்திருக்கும் பொறுமை இழந்து குட்டைத் தவளையாய் கத்தி வேறு குறை சொல்ல நூறு முறை பார்க்கிறேன். கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விடும் அபாயம் கருதி அடக்கி வாசிக்கையில் எதிர்ப்படும் என் குழந்தை மீது எறிகணைகள் வீசுகிறேன் - கையை ஓங்கி கன்னத்தில் அறைகிறேன். பிறகு நியாயம் கற்பிக்கலாம்-விடலாம்..சதாம் உசேனுக்கே காரணம் தேவைப்படாத உலகில்...இவன் வெறும் சாதாரணன் !
இன்னொரு தேநீர் சுவைக்கத் தருகிறாள்..வேண்டாதது போல் வாங்கி குடிக்கிறேன்..
மனதில் படுகிறது...ரொம்பத்தான் பண்ணுகிறோமோ?
இல்லை ஒரு வேளை..?  பால், தயிர், பேப்பர், மளிகை, காய்கறி
என்றவள் பட்டியல் இட எத்தனிப்பதை தடுக்கும் முயற்சியோ..?
விசும்பும் குழந்தையை ஓரக் கண்ணில் பார்க்கிறேன்..
 
"ஆம்! இன்னொரு விஷயம்..உங்களுக்கொரு கொரியர்  டெல்லியில் இருந்து..வந்திருக்கிறது.." என்கிறாள் என்னவள்.
பிரிக்கிறேன்....உள்ளே ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலை!
வாராது வந்த 'மணி'..மலர்கிறேன்...

 
சகஜம் திரும்பி..புன்முறுவல் பூத்து, குழந்தையைக் கிளப்பி கன்னம் கிள்ளிக் கொஞ்சி ஐஸ் கிரீம் வாங்கித் தந்து தாஜா செய்ய குழந்தையின் தளிர்க் கரம் பிடித்துக் கடைக்குக் கிளம்புகிறேன்.
"ஏம்மா! நைட்டுக்கு ஏதாவது தேவையா...ப்ரெட் இருக்கா..முட்டை-பால் ஏதாவது வாங்கி வரவா?"

என்று குரலில் கனிவைக் குழைத்து பேசிக்கொண்டே படியிறங்கிச் செல்கிறேன், ஓரக்கண்ணில் அவளும் குழந்தையும்
என்னை கேலிப் பொருளாய் பார்ப்பதைப் பார்க்காமலே!


-மோகன் பால்கி