Monday, February 1, 2010

பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்!


ஒரு மர வளர்வும கால முதிர்வும்
இணைந்து தருவது ஒரு பயன் என்னில்
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்
பல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் !

ஒரு மரம் வளர்ப்போன் aththanai yukthiyum
அம்மரந்தன்னில் அமுக்கி வளர்ப்பதாம்
நினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே
வாய்மையோவெனில் வெவ்வேறு பூமியில்

விதவிதம் விதைத்து அனுதினம் உடல்மன
வலிகள் பொறுத்து தோட்டம் காப்பவன்
தொய்விலா முயற்சியில் முளைப்பனவற்றில்
வருபொருள் நீட்டம் பன்மைப் பயனாம்!

-மோகன் பால்கி

No comments:

Post a Comment