Monday, February 1, 2010

காற்று ஒன்றா-பல்கிய பலவா ?


சி
றிதும்
பெரிதுமாய்...
அரங்கம் முழுதும் சிதறிப் பரவும்
ஊதிப் பெரிதாக்கிய காற்றுப் பலூன்கள் !

ற்சாகக் கரை உடைத்து
நுரைத்துப் பொங்கும்
மகிழ்ச்சியின் சப்தம்!

சிரித்த முகங்களும்
வருத்தம் தோய்ந்த
முதுமை மூச்சுயிர்
கரியமிலக் காற்றில்
ஊதிய மானுடர் உப்பிய பலூன்கள்!

யர்ந்து பறக்கும் கர்வச் சிரிப்பும்
உடைந்து சிதறும் துன்பக் கரிப்புமாய்
தானே அதுவென அதுவும் தானென
அடையாள படுதல்
சிறுவர்கள் ஆடிடும் சீரிய கூத்து!

காற்று காற்று எங்கணும் காற்று!
எத்தனைக் காற்று எது எது காற்று?

மொத்தக் காற்றினில் பதுங்கிய காற்று
பிதுங்கி முழுமையில் ஒன்றிய காற்று
மிச்சக் காற்றை ஊதி நிரப்பிடும்
வித விதமான உயிர்க்குடக் காற்று!
உள்ளுறைக் காற்று மேலுறைக் காற்று!

கட்புலனாகா அமீபா முதல்
கடல்வாழ் பேருயிர் திமிங்கலம் ஈறாய்
இன்னும் அறியாக் கோடி உயிர்களில்
நிரம்பிப் பிரியும் நீர்மக் காற்று- நிர்மலக் காற்று!

உள்ளும் வெளியும் எங்கணும் எங்கணும்..
இடை வெளியற்றதாய்...

காற்றில் உழலும் எனக்கோர் ஐயம் !

காற்று ஒன்றா-பல்கிய பலவா ?
காற்று அலையா? அலையா நிலையா?
காற்று உயிரா - உயிரின் ஊற்றா ?
உயிர்க்கும் காற்றா-நிறுத்தும் கூற்றா?

காற்று நிற்குமுன் பதிலிறு காற்றே!

-மோகன் பால்கி
(25.08.2007)

No comments:

Post a Comment