Sunday, December 5, 2010
பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது!
பெயரொன்று வைத்தானதால்
வந்த பீழை இது!
வரிஎன்றும் வார்த்தைஎன்றும்
அறிவென்றும் பெரிதென்றும்
இறுமாறும் வெளிஞானம்
உயர்வென்று தடுமாறுது!
விஞ்ஞானம் பெயர் வைக்கும்
நீருக்குள் நெருப்பிருக்க
வழியில்லை என்றெண்ணும்!
பின்னோர் நாள் 'ஆம்' ஆனால்
நெருப்பின்னை 'தொருப்பென்னும்!
வேறென்ன?
அலங்காரப் பொருள் செய்யும்
அதுபோதும் என்றெண்ணும்!
வேறென்ன?
அண்டத்தில் பிண்டமுள
பிண்டத்தில் அண்டமுள
என்றவனை பரிகசித்து
நீர் நெருப்பில் பெருவெடிப்பில்
பனியுருகும் பரிதவிப்பில்
விஞ்ஞானச் சிற்றெறும்பு
பொந்துக்குள் புலம்பி அழும்!
அருவொன்று உருவாகும்
உருவொன்று திடமாகும்
திடம் நீராய் காற்றாகி
மறைந்தங்கு மீண்டுவரும்!
பெயர் மாறும் அதற்கென்றும்
பெயரில்லை !
இயற்கை ஓர் பெரும் வியப்பு!
ஆதியந்தம் அற்ற வழி!
பிரபஞ்ச சமுத்திரத்தில்
சின்னதொரு சிப்பிகள் நாம்!
Posted by
Yozen Balki - (Mohan Balakrishna), YoZen Mind Counseling Psychologist, VIP Mentor, T. Nagar, Chennai, India.
at
12/05/2010 09:46:00 AM
No comments:


Subscribe to:
Posts (Atom)